தகவல்கள்

செல்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலாக வந்த சீட்டுக்கட்டு!!!

ஒட்டியம்பாக்கம் ஊராட்சி அரசன்கழனி வேடந்தாங்களைச் சேர்ந்தவர் முகமது அலி. 12,000 ரூபாய் செல்போனை 2999 ரூபாய்க்கு தருவதாக முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்து, தனது மகளின் ஆன்லைன் வகுப்பிற்காக, ஆர்டர் செய்துள்ளார்.பணத்தை கொடுத்துவிட்டு பார்சலை பிரித்து பார்க்குமாறு டெலிவரி பாய் கூற, அதனை கேட்காமல் முகமது அலி பார்சலை பிரித்துள்ளார்.

அப்போது செல்போனுக்கு பதில் 2 சீட்டுக்கட்டு இருந்ததை கண்டு முகமது அலி அதிர்ச்சி அடைய, டெலிவரி பாயோ பார்சலுக்கும் டெலிவரிக்கும் சம்பந்தமில்லை எனக்கூறி அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் டெலிவரி பாயை பிடித்த முகமது அலி, பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.