தகவல்கள்

செப்.30-க்குள் வரி செலுத்தலாம்… மாநகராட்சி அறிவிப்பு..!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு, தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்குச் செலுத்த வேண்டிய தொகையை அபராதமின்றி செலுத்தலாம் என, சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”2019-20-ஆம் ஆண்டுக்கான சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட கட்டணங்கள், மார்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் தொற்றுப் பரவல் காரணமாக அதற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஜுன் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள், எவ்வித அபராதமுமின்றி சொத்து வரி, தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தலாம்” என்று அறிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.