சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் பரவலான மழை பெய்தது.
சென்னை மாநகரிலும் பிற்பகலில் நேற்று மாலை முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், தேனாம்பேட்டை ஆகிய இடங்களிலும் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பொழிந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்று வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இன்று காலையிலும் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை கிழக்குக் கடற்கரை மற்றும் பழைய மகாபலிபுரம் பகுதிகளில் நண்பகலில் நேரத்தில் திடீரென கனமழை கொட்டத் தொடங்கியது. கார்கள், இருசக்கர வாகனங்களில் சென்றோர் திடீர் மழையில் நனைந்து ரசித்தபடி சென்றனர். திருவான்மியூர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், கொட்டிவாக்கம்,குரோம்பேட்டை, பள்ளிக்கரணை மற்றும் போரூர் ஆகிய பகுதிகளிலும் அரைமணி நேரம் மழை வெளுத்துவாங்கியது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மழை கொட்டியது. கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வந்த நிலையில் இன்று பகல் நேரத்தில் மழை பெய்ததது