தகவல்கள்

சென்னையில் முதல்முறையாக 65 நாட்களுக்கு பிறகு இன்று முதல் ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயக்கம்…!!!

தமிழகத்தில் 4ஆவது முறையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது ஆட்டோக்கள் இயங்குவதற்கு தளர்வு அளிக்கப்பட்டது. ஆனால் சென்னையில் அதுகுறித்த எந்தவொரு அறிவிப்பும் இல்லை.

தமிழகத்தில் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சென்னையில் முதல்முறையாக ஆட்டோக்கள், கால்டாக்ஸிகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது போல் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள் TN E-Pass இன்றி பயன்படுத்தலாம்.ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.