சென்னை

சென்னையில் மழையால் பாதிப்பா..? உதவிக்கு இந்த எண்களை அழையுங்க

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. பெரும்பாலான சாலைகள் தண்ணிரில் மிதக்கின்றன. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வட மாவட்டங்களான, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நள்ளிரவில் தொடங்கிய மழை இன்னமும் விடாமல் பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகளில் சிறிய வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிப்பதில்லை. பேருந்துகள் மற்றும் பெரிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

இதனிடையே, மழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்கள் புகார்கள் தெரிவிக்க அவசர எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 044 2538 4530, 044 2538 4540. ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் உதவிகள் குறித்து தெரிவிக்கலாம். அதேபோல் 24/7 இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு மையத்தினையும் (தொலைபேசி எண்: 1913) பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தண்ணீர் தேங்கினால் மரங்கள் விழுந்தால் அகற்றுவதற்கு மர அறுவை இயந்திரங்கள், மோட்டார் பம்புகள், படகுகள், நிவாரண மையங்கள், நடமாடும் மருத்துவக் குழுக்கள், பொது சமையல் அறை, அம்மா உணவகங்கள் தயாராக இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மழை காரணமாக பொதுமக்கள் வெளியில் தேவையின்றி நடந்து செல்வதை தவிர்க்கலாம். அறுந்துகிடக்கும் மின்சார கம்பிகள் இருப்பின் மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம்.  சாய்ந்து கிடக்கும் மரங்கள் குறித்தும் உடனடியாக மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.