விளையாட்டு

சுதந்திர தினத்தில் சி.எஸ்.கே பயிற்சியை தொடங்குகிறது.

இந்தியாவில் கொரோனோ வைரஸ் பரவலால் நடப்பாண்டு ஐ.பி.எல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீரர்கள் வரும் 21 ம் தேதி அமீரகம் செல்ல முடிவு செய்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கத்தில் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

தோனி, ரெய்னா, ஜடேஜா, அம்பதி ராய்டு, முரளி விஜய், அசீப், சாய் கிஷோர் உள்ளிட்ட இந்திய வீரர்கள் மட்டும் இந்த பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். பயிற்சி மேற்கொள்ளும் இந்திய வீரர்கள் இரண்டு முறை கொரோனோ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நெகட்டிவ் வரும் வீரர்கள் மட்டும் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர். இதனால் ஆகஸ்ட் 14 ம் தேதி தோனி சென்னைக்கு வரவழைக்கப்படவுள்ளார். தமிழக அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் சேப்பாக்கத்தில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கு முன்பு சென்னையில் இரண்டு முறை வீரர்களுக்கு கொரோனோ பறிசோதனை செய்யப்படவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வீரர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதால் சேப்பாக்கத்தில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.