சென்னைதமிழ்நாடு

கொரோனா உதவி பணிக்கு சென்ற கல்லூரி மாணவிக்கு காதல் வலை வீசிய அரசு அதிகாரி..வெளியானது சர்சைக்கூறிய ஆடியோ..!!

தமிழகம் உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால், அவற்றைத் தடுக்க மத்திய – மாநில அரசுகள் தொடர்ந்து கடுமையாகப் போராடி வருகின்றன. இதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், பல்வேறு தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு அரசு சார்பில் கொரோனா தடுப்பு பணியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட விருப்ப உள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி சார்பாக கடந்த சில மாதங்களாக அறிவிப்பு வெளியிடப் பட்டது.

சென்னையில் மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராயபுரம் மண்டலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தன்னார்வலராக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் கமலகண்ணன் என்பவர் அந்த கல்லூரி மாணவிக்கு காதல் வலை வீசியதாக தெரிகிறது

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் தன்னார்வலராகப் பணி புரிந்து வரும் தனியார் கல்லூரி மாணவியிடம், சென்னை தம்புச் செட்டித் தெருவில் உள்ள மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப் பணி ஆற்றும் கமல கண்ணன், அந்த மாணவிக்கு காதல் வலை விரித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே திருமணம் ஆன மாநகராட்சி உதவி பொறியாளர் கமல கண்ணன், தனது செல்போனில் அந்த இளம் பெண்ணுக்கு போன் செய்து, அவரது ஆசையை தூண்டி விடுகிறார். ஆசை ஆசையாய் பேசி, பணம் மற்றும் பதவி மீதான ஆசையை கமக கண்ணன், அந்த மாணவிக்கு காட்ட முயற்ச்சிகிறார். அத்துடன், செல்போனில் ஆபாசமாகவும் அவர் பேசுகிறார்.

ஒரு கட்டத்தில் கமல கண்ணனின் காதல் தொல்லையைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அந்த ஆடியோவை தன் சக நண்பர்களுக்கு அனுப்பி என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கிறார். ஆனால், ஆடியோவை யாரோ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால், அரசு அதிகாரி ஒருவர் கல்லூரி மாணவிக்குக் காதல் வலை விரிக்கும் ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்துடன், தன்னார்வலப் பணியில் ஈடுபட்டுள்ள மாணவிக்கு மாநகராட்சி உதவிப் பொறியாளர் காதல் தொல்லை அளித்த விவகாரம், சென்னை மாநகராட்சி மட்டுமின்றி தமிழகத்தின் ஒட்டுமொத்த மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம், சம்மந்தப்பட்ட அந்த இளம் பெண் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், இளம் பெண் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக் கொண்ட அனைத்து மகளிர் போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவிக்கு, சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் ஆபாசமாகப் பேசியதாக ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். அவரை பணி இடை நீக்கம் செய்து, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.