தமிழ்நாடு

குடிமகன்கள் அட்டகாசம் காரணமாக ராயனூர் மதுக்கடையை இடமாற்ற கோரிக்கை..!

கரூர்: ராயனூர் டாஸ்மாக் கடையில் குடிமகன் அட்டகாசம் காரணமாக பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கரூர் அருகே ராயனூரில், டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. குடியிருப்புகள் அதிகம் உள்ள, மெயின் ரோட்டில், மதுபான கடையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இங்கு, நாள் தோறும் தகராறு ஏற்பட்டு வருகிறது. மேலும், குடிமகன்கள், நடுரோட்டில் நின்று கொண்டு ஆபாச வார்த்தைகளை பேசுவதும், அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி செய்வதும் தொடந்து நடந்து வருகிறது. இதுகுறித்து ராயனூர் மக்கள் கூறியதாவது: ராயனூரில், பஸ்ஸ்டாப் அருகே மதுபான கடை உள்ளது. பஸ்ஸ்டாப்பில் நிற்கும் பெண்களை, டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் கேலி செய்கின்றனர்கள். இதை தட்டி கேட்டால், தகராறு ஏற்படுகிறது. மெயின் ரோட்டில் உள்ளதால், குடிமகன்கள் வரும் வாகனங்கள், யாரும் செல்ல முடியாத வகையில், நடுரோட்டில் நிறுத்தப்படுகிறது. இதனால், ராயனூர் பகுதியில் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இந்த டாஸ்மாக் மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.