இந்தியாதமிழ்நாடு

கணவனை பிரிந்து வாழும் மனைவிகளை குறிவைத்து மிரட்டும் கும்பல்..!!அதிகரிக்கும் வன்முறை செயல்கள்!!

கணவனை பிரிந்து வாழும் மனைவிகளை குறிவைத்து மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் சிறப்பு தொலைப்பேசி எண்ணிற்கு அழைத்து பெண் ஒருவர், அதிர்ச்சி ஊட்டும் புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அந்த புகாரில், “கணவனை பிரிந்து வாழும் மனைவிகளை குறி வைத்தும், வெளி நாட்டில் வேலை பார்ப்பவர்களின் மனைவிகளைக் குறி வைத்தும், ஒரு கும்பல் பெண்களை மிகவும் ஆபாசமாகப் படம் எடுத்து, தொடர்ந்து மிரட்டி பணம் பறித்து வருவதாக” அதிர்ச்சி ஊட்டினார்.

இதனால், அதிர்ச்சியடைந்த காவல் கண்காணிப்பாளர், அந்த பெண்ணை நேரில் வரவைத்து, விசாரணை நடத்தினார். அப்போது, சம்பந்தப்பட்ட அந்த பெண் ஏர்வாடி பகுதியில் வசித்து வருவதாகவும், கணவரால் கை விடப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.

அவர் அளித்த புகாரின் படி, “ஏர்வாடி பகுதியில் செயல்பட்டுவரும் ஏர்பாத் நெட் கபே என்கிற செல்போன் ரீசார்ஜ் கடையை பாதுஷா, ஹாஜி ஆகிய இருவரும் நடத்தி வருகின்றனர். இந்தக் கடையில் சகாபுதீன் என்பவர் வேலை செய்து வருகிறார். குறிப்பிட்ட அந்த கடையில், செல்போன் ரீசார்ஜ் மட்டும் இன்றி பிறப்பு – இறப்பு, ஓட்டுநர் உள்ளிட்ட அரசுச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள், என இ-சேவை மையம் போலவே அந்த கடை செயல்பட்டு வந்துள்ளது.

குறிப்பாக, சில சட்ட விரோத லாட்டரி மற்றும் சூதாட்டம் உள்ளிட்ட செயல்பாடுகளிலும் அந்த கடை செயல்பட்டு வருவதாகவும்” அவர் குற்றம் சாட்டினார்.அத்துடன், அந்தக் கடையில் பணிபுரிந்த சகாபுதீன், கணவரால் கை விடப்பட்ட என்னை, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, என்னை முழுவதுமாக பயன் படுத்திக்கொண்டார் என்றும், அவர் கடையின் உரிமையாளரிடம் வாங்கிய 10 லட்சம் ரூபாய் கடனை தொகையை அடைக்க உதவி செய்யுமாறு கேட்டதாகவும்” அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சகாபுதீன் பணம் கேட்டது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் இருந்த நிலையில், “பணம் தர வில்லை என்றால், என்னுடைய ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்” என்று, அவர் மிரட்டியதாகவும்” புகார் அளித்தார்.

குறிப்பாக, இந்த மிரட்டல் விவகாரத்தில், அந்த குறிப்பிட்ட செல்போன் கடையின் உரிமையாளர்களான பாதுஷா, ஹாஜி, ஆகியோரும் கூட்டு சேர்ந்தே, சகாபுதீன் மூலமாக மிரட்டி வருவதாகவும்” பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தனிப்படை அமைத்து உத்தரவு பிறப்பித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த மோசடி கும்பல் பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, “கணவர் வெளிநாட்டில் இருக்கும் பெண்களைக் குறி வைத்தும், கடைக்கு ரீசார்ஜ் செய்யும் போது அவர்களின் செல்போன்களில் ‘Any desk’ என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாகவே குறிப்பிட்ட சில பெண்களின் ஆபாச புகைப் படங்களை எடுத்து வைத்துக் கொண்டு, அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி வருவதும்” போலீசாருக்கு தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த பாதுஷா, சகாபுதீன் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 4 செல்போன்கள், 1 லேப்டாப் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து, இவர்களைச் சிறையில் அடைத்த போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, கணவனைப் பிரிந்து வாழும் மனைவிகளை குறிவைத்து மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.