கதைகள்தமிழ்நாடு

எஜமானின் உயிரைக்காக்க தன் உயிரை கொடுத்த ‘ரியோ’..தஞ்சையில் நடந்த இதயம் தொடும் சம்பவம்

தஞ்சை இ.பி.காலனி சிந்து நகரை சேர்ந்த எழில்மாறன் – மாலா தம்பதிகள், ஸ்வீட்டி, ரியோ என இரண்டு நாய்களை செல்லமாக வளர்த்து வந்தனர். வீட்டில் தனிமையாக இருந்த தம்பதிகள், இந்த இரண்டு நாய்களையும் பெற்ற பிள்ளைகளை போல் பாசமாக வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், இரவில் இவர்களது வீட்டிற்குள் கடும் விஷம் கொண்ட பாம்பு நுழைந்துள்ளது. இதனை பார்த்த செல்லப்பிராணி ரியோ, உரிமையாளர்களை காப்பதற்காக பாம்புடன் சண்டையிட்டுள்ளது. நீண்ட நேரம் நீடித்த சண்டையில் பாம்பை ரியோ கடித்துக் கொன்ற நிலையில், பாம்பு கொத்தியதில் விஷம் தாக்கி ரியோவும் உயிரிழந்தது.

இந்நிலையில் பாம்புடன் சண்டையிட்டு செல்லப்பிராணி ரியோ உயிரிழந்தை கண்டு, எழில்மாறன் – மாலா தம்பதியினர் கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் ரியோவின் உடல் வீட்டின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.