தகவல்கள்தமிழ்நாடு

இயக்குனர் மர்ம மரணம்.. கொரோனாவா என சந்தேகம்… அச்சத்தால் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு..!

அழைப்பிதழ், கேடயம் படங்களை இயக்கியவர் ராஜு மோகன்(47). சினிமா ஆசையில் சொந்த ஊரான கோவையில் இருந்து சென்னை வந்த இவர் தனது 3வது படத்திற்காக தயாராகி வந்தார். ஆனால் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் கே.கே.நகரில் உள்ள தனது அலுவலகத்திலேயே அவர் தங்கினார்.

அவர் காலை, இரவு சமைத்து சாப்பிட்டுவிட்டு மதிய உனவுக்கு மட்டும் நண்பர்கள் இருக்கும் அறைக்கு சென்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவர் மதிய உணவுக்கு வராததால், அவரது அறைக்கு உணவு எடுத்துக்கொண்டு நண்பர்கள் சென்றனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து திறந்தபோது அவர் இறந்து கிடப்பது தெரிந்தது. உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கே.கே.நகர் போலீசார் சடலத்தை கைப்பற்றி ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பே மரணத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால் அவரது நண்பரும் இயக்குனருமான கீரா, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் ராஜு மோகனுக்கு இறுதி சடங்குகள் செய்ய ஏற்பாடு செய்தனர். ராஜிவ் காந்தி மருத்துவமனை கொரோனா பரிசோதனைக்காக ராஜு மோகன் உடல் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கோவையில் உள்ள உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து விட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.