விளையாட்டு

“இது வெறும் விளையாட்டு மட்டுமே” – சாக்ஷி தோனி உணர்ச்சிகர பதிவு

இது வெறும் விளையாட்டு மட்டுமே. இதில் சிலவற்றை வெல்ல முடியும். சிலவற்றை இழக்க முடியும். நம் மனதிலும், இதயத்திலும், அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ்தான்’ என ஐ.பி.எல் 2020-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்து பதிவிட்டுள்ளார் சாக்‌ஷி தோனி. தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் போடியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில்,  மீதமுள்ள ஆட்டங்களை விளையாடி வருகிறது.

நேற்று நடைபெற்ற போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூருவை எதிர்த்து விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சூப்பர் கிங்ஸ் அணி. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிக்கரமான பதிவு ஒன்றை போஸ்ட் செய்திருக்கும் சாக்‌ஷி தோனி, “இது வெறும் விளையாட்டு. சிலவற்றை இழக்கிறார்கள்..சிலவற்றை பெறுகிறார்கள். இதற்கும் முன்பு வெற்றிகளையும், வலிகொடுக்கும் தோல்விகளையும் சந்தித்து இருக்கிறோம். யாரும் தோற்க விரும்பவில்லை. ஆனால் அனைவராலும் வென்றுவிட முடியாது. நிஜமான வீரர்கள் போராட பிறக்கிறார்கள். அதனால், அவர்கள் நமது மனதிலும், இதயத்திலும் சூப்பர் கிங்ஸ்தான் எப்போதும்” என பதிவிட்டிருக்கிறார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.