தகவல்கள்

அடுத்து அடுத்து சோகம்… சுஷாந்த்தின் அண்ணி உயிரிழப்பு!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட செய்தி திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் அவரது அண்ணி ஒருவர் இறந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஒன்று விட்ட சகோதரரின் மனைவி சுதா தேவி என்பவர், திங்களன்று சுஷாந்தின் இறுதிச்சடங்குகள் மும்பையில் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே சமயத்தில், அவரது சொந்த ஊரான பிகார் மாநிலம் பூர்ணியாவில் உயிரிழந்துள்ளார் தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிறன்று சுஷாந்த் தற்கொலை செய்துகொண்ட தகவல் தெரிந்தபின் உணவு உட்கொள்வதை அவர் நிறுத்திக்கொண்டார் என்று தெரியவந்துள்ளது. பாலிவுட்டில் ‘காய் போ சே’ என்னும் படத்தின் மூலம் அறிமுகமான சுஷாந்த் தோனியின் சுயசரிதை திரைப்படம் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இவரது மறைவினால் திரையுலகமும், ரசிகர்களும் பெரும் சோகத்தில் உள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.