இந்தியாதகவல்கள்

இப்படியொரு பாதகமான சூழலையும் தங்களுக்கு சாதகமாக உபயோகித்து கொண்ட தெலுங்கானா…நாமும் இதை பின்பற்றலாமே..?

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ளது. மத்திய அரசு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்னும் சில நாட்களில் முடியும் தருவாயில் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பாடில்லை. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஊரடங்கின் காரணமாக சாலைகள் காலியாகவுள்ள நிலையில், இதனை சிறந்த முறையில் பயன்படுத்தி தெலுங்கானா அரசு சிறப்பான வேலையில் ஈடுபட்டு வருகிறது. சாலைகளில் வாகனங்கள் எதுவும் அதிகம் செல்லாத இந்த நேரத்தில், ஹைதராபாத் பகுதியிலுள்ள பிராதன சாலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அது மட்டுமில்லாது, மேம்பாலங்களில் பணிகளையும் இந்த சமயத்தை பயன்படுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு நேரத்தை சிறப்பாக பயன்படுத்தியுள்ள தெலுங்கானாவின் ஐடியாவை மற்ற மாநிலங்களும் பின்பற்றலாம் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதனால் மக்களுக்கும் இடையூறு ஏற்படாது அதே சமயம் சீரமைப்பு பணியும் சிறப்பாக நடை பெறும்.ஊரடங்கு முடிந்து பணிகளுக்கு திரும்பும் மக்களுக்கு இது போன்ற செயல்கள் ஒரு நல்ல துவக்கத்தை கொடுக்கும்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.