இந்தியா

53 பத்திரிகையாளர்களை தாக்கிய கொரோன: அதிர்ச்சியில் மும்பை

கொரோனா பாதிப்பு குறித்த செய்திகளை சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கி வருவது குறித்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை அன்று  சென்னையில் கூட இரண்டு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியதாகவும் இதனையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்தது. இதனை அன்று சென்னையில்  சுகாதாரத்துறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேலும் அதிர்ச்சிக்கு உரிய வகையில் மும்பையை சேர்ந்த 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில்  171 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 53 நபர்கள் கொரோனா உறுதி செய்யப்பட்டது இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 53 பத்திரிகையாளர்களில் போட்டோகிராபர்கள், வீடியோ எடுப்பவர்கள், செய்தியாளர்கள் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா குறித்த செய்திகளை சேகரிக்க செய்யும் பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.