தகவல்கள்தமிழ்நாடு

ஆன்லைனில் பாலியல் தொழில் – மதுரையில் அதிர்ச்சி!!!

மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வறுமையில் உள்ள பெண்களை பயன்படுத்தி நகரில் இருந்து கிராமம் வரை பாலியல் தொழில் சேவை செய்யும் இணைய சேவை ஒன்றின் சட்டவிரோத செயல், ஆய்வில் அம்பலமாகியுள்ளது. சட்ட விரோதம் என்றாலும் பலரின் கண்களில் மண்ணை தூவி பாலியல் தொழில் ஆங்காங்கே நடப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பெருநகரங்களில் நடந்து வரும் இந்த பாலியல் தொழில் தற்போது கிராமங்கள் வரை பரவிவிட்டது என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான்.

அதுவும் கிராமங்களில் வறுமையில் வாடும் பெண்களை பயன்படுத்தி குறிப்பாக தென்மாவட்ட பெண்களை இணையவாயிலாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் செயலில் கும்பல் ஒன்று களமிறங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. ஊரடங்கிற்கு பிறகு பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அவ்வாறு வேலை இழந்து வறுமையில் வாடுவோரை குறிவைத்துதான் இந்த பாலியல் தொழில் விரிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிகிறது. உடனடியாக காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தலையிட்டு கிராமப் பெண்களுக்கு வலைவீசும் பாலியல் இடைத்தரகர்களை கைது செய்வதுடன் ,சம்மந்தப்பட்ட இணையதளத்தின் இது போன்ற சேவையையும் நீக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.