தகவல்கள்

சொத்தைப் பல் வலியால் எதுவும் சாப்பிட முடியாமல் உள்ளதா..?

வாய் சுகாதாரம்தான் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கிய பாதையாக இருக்கிறது. அதை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டாலே பாதி பிரச்னைகளை தவிர்க்கலாம். அந்த வகையில் சுகாதாரமற்ற பழக்கங்கள் மட்டுமன்றி உணவுகள் மூலமாகவும் வாயில் சொத்தைப்பல் வர காரணமாக இருக்கின்றன. இது பற்களை அரித்து எந்த உணவையும் சாப்பிட முடியாமல் தீராத வலியையும் தரும். ஆரம்ப நிலை சொத்தைப் பல் வலி எனில் வீட்டுக் குறிப்புகளைக் கொண்டு சரி செய்யலாம். அவை என்னென்ன பார்க்கலாம்.பூண்டு பல்லுடன் இரண்டு கல் உப்பு வைத்து பாதிக்கப்பட்ட பல் மேல் வைத்து வாயை மூடிவிடுங்கள். இதனால் பூண்டில் இருக்கும் ஆண்டி பாக்டீரியாக்கள் வலியைக் குறைத்து சற்று இலகுவாக இருக்கும்.

வெதுவெதுப்பான சுடுநீர் கூட பல் வலிக்கு இதமாக இருக்கும். எனவே வெதுவெப்பான நீருடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வாயை நன்கு கொப்பளித்து துப்புங்கள். இதை வலி வரும்போது மட்டுமல்ல பொதுவாகவே உணவு சாப்பிட்டபின் செய்து வந்தால் உணவுத் துகள்கள் சிக்கி இருந்தாலும் வெளியேறும். சொத்தைப் பல் வருவதையும் தவிர்க்கலாம்.கிராம்பை வலி இருக்கும் பல்லின் மீது வைத்து வாயை மூடிவிட பல் ஈறுகள் ஜிவ்வென இழுக்கும். இதனால் வலி சற்று குறைந்து இலகுவாக இருக்கும். கிராம்பு எண்ணெய் இருந்தாலும் அதை பல் மீது தடவலாம். மஞ்சள் ஆண்டி பாக்டீரியா மற்றும் ஆண்டி செப்டிக் பண்புகளை உள்ளடக்கியதால் அதை கொஞ்சமாக எடுத்து பல்லின் மீது தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரினால் வாயைக் கொப்பளித்து விடுங்கள். இதனால் ஈறுகளும் ஓய்வு பெறும்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.