இயற்கை

மழைக்காலங்களில் கொரோனா அதிகரிக்குமா? மதுரை சுகாதார அதிகாரியின் விளக்கம்

மழைக்காலம் என்பதால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா? என்பது தொடர்பாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் இருந்ததை விட தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் நாளொன்றுக்கு 50-க்கும் குறைவான நபர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மதுரையில் குறைந்தது போல், அதனை சுற்றி உள்ள மாவட்டங்களான விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்துள்ளது.

இந்தநிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா? என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் மக்களிடம் எழுந்துள்ளன. இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார் கூறியதாவது:-

தமிழகத்தை பொறுத்தமட்டில் வெயில் காலமான மார்ச், ஏப்ரல் மாதத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் லேசான மழைதான் பெய்தது. அதிலும் மதுரையில் எதிர்பார்த்த அளவில் மழை பெய்யவில்லை. பொதுவாக மழைக்காலங்களில் டெங்கு அதிகம் தாக்கும் என்பதால் டெங்கு ஒழிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மழைக்காலங்களில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருக்குமா-குறையுமா? என்பதை இப்போது உறுதியாக கூறமுடியாது. அதிகரிக்கும் என்ற கண்ணோட்டத்தோடு அதனை கட்டுப்படுத்துவதற்காக பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதிகரிக்கவில்லை என்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். அரசு அறிவுறுத்தும் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடித்து வருகிறோம்.

மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், மக்கள் வெளிய வர தயங்குவார்கள். அதன் மூலம் கொரோனா பாதிப்பு குறையவும் வாய்ப்புள்ளது. மதுரை மாவட்டத்தை பொறுத்தமட்டில் தற்போது நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேர் வரை பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், நகர் மற்றும் புறநகர் பகுதியில் நடமாடும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி புறநகரில் 114 இடங்களிலும், நகரில் 115 இடங்களிலும் இந்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

ஆண்டுதோறும் டெங்கு காய்ச்சலுக்கு எவ்வாறு முன்எச்சரிக்கையுடன் செயல்படுவோமோ, அதுபோல் இந்த ஆண்டு கொரோனா, டெங்கு பரவலை தடுக்கும் வகையில் முன்எச்சரிக்கையுடன் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.