தகவல்கள்

சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று..!

சாத்தான்குளம் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ குழுவில் இடம்பெற்றுள்ள சார்பு ஆய்வாளர் சச்சின் மற்றும் தலைமைக் காவலர் சைலேந்திர குமார் ஆகிய இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் மதுரை ரயில்வே மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், பவன், அஜய் என்ற இரண்டு சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அட்னுமதிக்கப்பட்டுள்ளனர்.

தந்தை, மகன் மரண வழக்கில் மூன்று காவலர்களை வியாழக்கிழமை வரை சிபிஐ காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியிருந்த நிலையில், புதன்கிழமையே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதையடுத்து காவலர்கள் வெயில்முத்து, சாமதுரை மற்றும் செல்லத்துரை ஆகியோரை ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி ஹேமா நந்தகுமார் உத்தரவிட்டார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.