உலகம்தகவல்கள்

“தடுப்பூசியை கண்டுபிடிக்க முடியாமலே போகலாம்”, மக்களுக்கு ஆற்றிய உரையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு…!

லண்டன்: ”கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஓராண்டு ஆகலாம் அல்லது கண்டுபிடிக்க முடியாமலே கூட போகலாம்,” என குண்டை தூக்கி போட்டுள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து 4வது இடத்தில் உள்ளது. அங்கு 2 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், இன்று முதல் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அது தொடர்பாக 50 பக்கங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று வெளியிட்டார்.

அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ”கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் முழுவீச்சில் நடக்கின்றன. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் ஆய்வாளர்கள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், இந்த வைரசுக்கான முழுமையான தடுப்பூசி கண்டறிய ஓராண்டுக்கு மேல் ஆகலாம். ஒருவேளை தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமலேயே கூட போகலாம். எனவே, எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்,” என்றார். இவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிர் தப்பி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.