தகவல்கள்விளையாட்டு

கால்பந்து ஏலத்தில் அணி மாறுவாரா..!! ‘நெய்மர் பதில் என்ன..??’

பாரிஸ்: பார்சிலோனா அணிக்கு நெய்மர் மீண்டும் செல்வதை தடுக்கும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க, பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் அணி முடிவு செய்துள்ளது.

பிரேசில் கால்பந்து அணி கேப்டன் நெய்மர் 28. பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வந்த இவரை, கடந்த 2017ல் ரூ. 1829 கோடிக்கு, பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் அணி வாங்கியது. வாரத்துக்கு ரூ. 5.7 லட்சம் சம்பளம் வழங்கி வந்தது.இதனிடையே வரும் சீசனில் நெய்மர், மீண்டும் பார்சிலோனா அணிக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நெய்மரை வரும் 2025 வரை தக்கவைக்க பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் அணி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதற்காக வாரத்துக்கு ரூ. 6 லட்சம் சம்பளம் வரை கொடுக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இதன் படி நெய்மருக்கு ஆண்டுக்கு ரூ. 313 கோடி வரை கிடைக்கும். நெய்மர் இதை ஏற்பாரா அல்லது மெஸ்சி உள்ளிட்டோர் இடம் பெற்ற பார்சிலோனா அணிக்கு மீண்டும் திரும்புவாரா என விரைவில் தெரியவரும்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.