இந்தியாகதைகள்

டோல்கேட் ஊழியரின் கன்னத்தில் அறைந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பெண் தலைவர் – வைரல் வீடியோ..

குண்டூர் மாவட்டத்தில் உள்ள டோல்கேட் ஊழியர் ஒருவரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள கஜா டோல்கேட்டில், வழக்கம்போல் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுங்கச்சாவடியின் ஒரு பாதையில், ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான டி.ரேவதி காரில் வந்தார். அவர் சுங்க கட்டணம் செலுத்த மறுத்ததாக கூறப்படுகிறது.

சுங்கக்கட்டணம் செலுத்தாமல் அவரது காரை அனுப்ப முடியாது என ஊழியர்கள் கூறி உள்ளனர். அத்துடன் அவரது கார் செல்ல முயன்ற பாதையை பேரிகார்டு மூலம் அடைத்தனர். இதனால் கோபமடைந்த ரேவதி அந்த பேரிகார்டை அப்புறப்படுத்த முயன்றார். டோல்கேட் ஊழியர் தடுக்க முயன்றும் முடியவில்லை.

ஒரு கட்டத்தில் பேரிகார்டை வேகமாக தள்ளிவிட்ட ரேவதி, டோல்கேட் ஊழியரின் கன்னத்திலும் அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.