தமிழ்நாடு

12ம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பங்களை சமர்பிப்பதில் சிக்கல்

12ம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க  விடைத்தாள் நகலினை பள்ளிகள் மூலம் மாணவர்கள் நேற்று முதல்  www.dge.tn.gov.in என்கிற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவிப்பை வெளியிட்டது. விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்த பின்பு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பத்தினை 21-ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. உதாரணமாக ஒரு மாவட்ட தலைநகரில் இருந்து  தொலைவில் அமைந்துள்ள கிராமத்தை சேர்ந்த மாணவர் பொது போக்குவரத்து இல்லாத இந்த சமயத்தில் நேரடியாக சென்று மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைப்பது என்பது சிரமமான காரியமாக அமைந்துள்ளது. இதனால் விடைத்தாள் நகலினை பள்ளியில் இருந்து வழங்கியதை போல மறுகூட்டலுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை  மாணவர்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாக பெற்றுக்கொள்ள அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.