தகவல்கள்தமிழ்நாடு

மளிகைக்கடை ஊழியர் கொன்று கோயில் வளாகத்தில் புதைப்பு!!!

கோயில் வளாகத்தில் மளிகை கடை ஊழியர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில், பிரபல ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூரில், கடந்த 12-ஆம் தேதி பண்ருட்டியில் காணாமல்போன கண்ணதாசன் என்பவர் லிங்கா ரெட்டி பாளையத்தில் உள்ள கோவிலில் கொன்று புதைக்கப்பட்ட இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கண்ணதாசனை கொன்று புதைத்த இந்த வழக்கில், பிரபல ஜோதிடர் கோபிநாத் (52), அவருடைய நண்பர் திருப்பதி (56) மற்றும் கண்ணதாசனின் கள்ளக்காதலி மஞ்சுளா(30) கைது செய்யப்பட்டுள்ளனர். கோவிலுக்குள் பகல் நேரத்தில் உடலை தோண்டி எடுத்தால் பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதால் இரவோடு இரவாக போலீசார் கோவிலுக்குள் இருந்து உடலை தோண்டி எடுத்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்காக கொண்டு சேர்த்துள்ளனர். பிரபல ஜோதிடராக வலம்வந்த கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளது கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.