தமிழ்நாடு

மின்வாரிய ஊழியரின் பைக் போலீசால் பறிமுதல் – பதிலடி கொடுத்த மின்வாரிய ஊழியர்…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மின்சார வாரிய ஊழியர் சைமன் என்பவரின் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. மேலும், 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்த காரணத்தால், வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

இதுகுறித்து உதவி மின் பொறியாளர் கோபாலசாமியிடம் சைமன் புகார் தெரிவித்தார். கோபாலசாமியின் உத்தரவிற்கிணங்க கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு வரும் மின்சார வயரை, மின் வாரிய ஊழியர்கள் துண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகே காவல் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதுகுறித்து காவல் நிலைய ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.