இந்தியா

சாப்பிட முடியாமல் தவிக்கும் மக்னா யானை – வனத்துறையினர் தீவிர முயற்சி

கோவை மருதமலை வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை வாயில் காயத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சாப்பிட முடியாமல் சுற்றிதிரிந்தது. கோவை வனத்துறை மருத்துவர் சுகுமார் மற்றும் வனப் பணியாளர்கள் வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த மக்னா  யானையை பின் தொடர்ந்து, காயம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து கண்டறிய முயற்சி மேற்கொண்டனர். காட்டு யானை ஒரே இடத்தில் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து சென்றது. இந்நிலையில்  மருதமலை வனப்பகுதியில் இருந்து மாங்கரை வனப்பகுதி வழியாக கடந்த  ஞாயிற்றுக்கிழமை கேரள வனப்பகுதிக்குள் சென்றது. கேரள வனப்பகுதியில்  நல்லசிங்கா வனப்பகுதிக்குள் மக்னா யானை சென்ற நிலையில், இது குறித்து கேரள வனத்துறை அதிகாரிகளுக்கு கோவை வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

மன்னார்காடு மாவட்ட வன அலுவலர் சுனில் உத்தரவின் பேரில் கேரள வனத்துறையினர் காயம்பட்ட யானையை  தற்போது பின்தொடர்ந்து கண்காணித்து  வருகின்றனர். காயம்பட்ட இந்த மக்னா யானைக்கு இன்று  வயநாட்டில் இருந்து வனத்துறை மருத்துவ குழு  சிகிச்சை அளிக்க இருக்கின்றனர். சிகிச்சை அளிக்கும் போது தான் இந்த காயம் எப்படி  ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள்  தெரியவரும். வாயில் புண்ணுடன்  சாப்பிட முடியாமல் இருக்கும் மக்னா  யானைக்கு  இரு மாநில வனத்துறையினரும்  இணைந்து சிகிச்சை அளித்து காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.