இந்தியா

2ஜி மேல்முறையீட்டு மனு.. டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

கடந்த 2008-ஆம் ஆண்டில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைமுறை அலைவரிசையை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதுதொடர்பாக அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம், ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேரையும் விடுவித்து, கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி உத்தரவிட்டது.  இதனை எதிர்த்து, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள், அடுத்த மாதம் 12-ம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை மனுக்களை தாக்கல் செய்தன. இந்த மனுக்களை நீதிபதி பிரிஜேஷ் சேதி விசாரித்தார்.அப்போது, நீதிபதி பிரிஜேஷ் சேதி, நவம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளதால், அதற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதி இன்று தனது தீர்ப்பை அளிக்கிறார்.

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.