தமிழ்நாடு

ஆயுள்தண்டனை கைதியின் நேர்மை…

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே சிறைத்துறை நிர்வாகத்தால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் ஆயுள் தண்டனை கைதிகள் மட்டுமே பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். சிறைக் கைதிகளைக் கொண்டு செயல்படும் இந்த பெட்ரோல் பங்கில் நாள்தோறும் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பி செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று அடப்பன்வயலை சேர்ந்த சரவணன் என்ற வாடிக்கையாளர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி விட்டு சென்ற போது அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க நகை அங்கு தவறி விழுந்து விட்டது. இதுகுறித்து அறியாத அவர் அங்கிருந்து சென்று விட்ட நிலையில் பெட்ரோல் பங்கின் கீழே கிடந்த ரூ 65,000 மதிப்புள்ள அந்த தங்க செயினை அப்போது பணியில் இருந்த ஆயுள் தண்டனை கைதியான கிறிஸ்து ஆரோக்கியராஜ் என்பவர் எடுத்து சிறைத்துறை அதிகாரிகளிடம் பத்திரமாக கொடுத்துள்ளார்.

அவரின் இந்த செயலை அறிந்த சிறைத்துறை நிர்வாகம் அவரின் நேர்மையை பாராட்டியதோடு தங்கச் செயினை விட்டுச்சென்ற நபர் குறித்து தகவல்களை சேகரித்து வந்துள்ளனர்.இந்நிலையில் தனது தங்கச்செயினை தவறவிட்ட சரவணன் அங்கு வந்து தனது செயின் காணாமல் போனது குறித்து பெட்ரோல் பங்க் நடத்திவரும் சிறை துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இதன்பின் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அந்தத் தங்கச் செயின் சரவணனுக்கு சொந்தமானதுதான் என்பதை உறுதி செய்த சிறைத்துறை நிர்வாகம் அவரிடம் அந்த செயினை ஒப்படைத்தனர்.புதுக்கோட்டை மாவட்ட சிறைத்துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி தங்கச் செயினை தவறவிட்ட சரவணனிடம் அதனை மீண்டும் ஒப்படைத்ததோடு நேர்மையோடு கீழே கிடந்த செயினை கொண்டு வந்து கொடுத்த ஆயுள் தண்டனை கைதியான கிறிஸ்து ஆரோக்கியராஜையும் பாராட்டினார். புதுக்கோட்டையில் நடந்த இந்த நிகழ்வு காண்போருக்கு வியப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.