சினிமா

சம்பளம் வாங்காமல் நடிக்க ஓகே சொன்ன யோகி பாபு…

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு ஹீரோவாகவும், மாளவிகா மேனன் ஹீரோயினாகவும் நடித்துள்ள படம் ‘பேய்மாமா’. மேலும் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை சரளா, ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், அனுமோகன், பாஸ்கி, சாம்ஸ், லொள்ளுசபா மனோகர், அபிஷேக், பேபி சவி என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்திருக்கும் ‘பேய்மாமா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர்ராஜூ, இயக்குநர் சக்தி சிதம்பரம், மிஷ்கின், நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். யோகி பாபு பேசும் போது, “ஷக்தி சிதம்பரம் இந்த மேடையில் என்னை ஹீரோவாக நிற்க வைத்து விட்டார். ரொம்பவும் பயமாக இருக்கிறது.

இந்தப் படம் முதலில் வடிவேல் சாருக்கு பண்ணியதாக இயக்குநர் சொன்னார். உடனே நான், வடிவேலு சார் ஜீனியஸ். அதனால் எனக்கு எப்படி செட்டாகும் என்று கேட்டேன். இந்தப்படம் வெற்றி அடைய உங்கள் அனைவரது ஆதரவும் அன்பும் வேண்டும். நான் சம்பள விசயத்தில் பெரிய கறார் கிடையாது. என் மேனஜரிடம் வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள். சமீபத்தில் கூட ஒரு உதவி பெண் இயக்குநர் ஒரு கதைப் பண்ணிருக்கேன். நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் என்னிடம் பட்ஜெட் இல்லை. இந்தப் படம் நடந்தா தான் சார் எனக்கு கல்யாணம் நடக்கும் என்று அந்தப் பெண் இயக்குநர் சொன்னார். நான் உடனே சம்பளம் வாங்காமல் நடித்துத் தருகிறேன். உனக்கு திருமணம் நடக்கட்டும் என்று சொன்னேன். இப்படி நிறைய அட்ஜெஸ்மெண்ட் செய்து கொண்டு தான் இருக்கிறேன். ஷக்தி சிதம்பரம் சார் டயலாக்கில் நிறைய சுதந்திரம் கொடுத்தார். அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் ட்ரெய்லரில் சொன்ன மாதிரி நான் காமெடியன் தான் காமெடியன் தான். அனைவருக்கும் நன்றி” என்றார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.