தமிழ்நாடு

சிறப்பு அந்தஸ்து அண்ணாப் பல்கலைக்கழகத்துக்கு வேண்டும் – முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்…

அண்ணாப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கம் செய்தியாளர்கள் மன்றத்தில் நடைபெற்றது.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கல்வியில் இலக்குகளை அடைய புதிய கல்விக்கொள்கை தேவை. இந்தியா இன்னும் அடையவில்லை என்று தெரிவித்தார். தமிழகமே உயர்கல்வியில் நாட்டில் முதலிடத்தில் உள்ளது. உலகளவில் இந்தியா ஆராய்ச்சியில்( புள்ளி 4.0%) என்ற மிக குறைந்த சதவிகிதத்தில் உள்ளதாக தெரிவித்தார். 2025ம் ஆண்டிற்குள் பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர் எண்ணிக்கையை அடைய புதிய கல்விக் கொள்கை அவசியம் என்று தெரிவித்தார்.

அண்ணாப் பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை தமிழக அரசு ஏற்க மறுத்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது. துரதிஷ்டவசமானது என்று குறிப்பிட்ட அவர் தமிழக அரசு அதன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சிறப்பு அந்தஸ்த்திற்கான நிதியை பல்கலைக்கழகமே திரட்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதில் எந்த தவறும் இல்லை என்று பாலகுருசாமி தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் தமிழக அரசு அதன் விவகாரங்களில் தலையிட முடியாது என்று கூறிய அவர் இதன் காரணமாகவே சிறப்பு அந்தஸ்தை தமிழக அரசு ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.