உலகம்கதைகள்

78 வயது கணவர் 17 வயது மனைவியிடம் விவாகரத்து கேட்டு வழக்கு: திருமணமாகி 22 நாட்களில் நடந்த சிக்கல்

17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட 78 வயதான முதியவர் தற்போது விவாகரத்து கூறி நீதிமன்றத்தை நாடியுள்ள சம்பவம் இந்தோனேஷியாவில் அரங்கேறியுள்ளது.

இந்தோனேஷியா நாட்டை சேர்ந்தவர் அபா சர்னா(78) மற்றும் அவரது மனைவி நோனி நவிதா(17).

இவர்கள் திருமணமாகி 22 நாட்களில் விவாகரத்து கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த புதுமண தம்பதிகள் வயது பிரச்சனை காரணமாக மக்களை ஈர்த்துள்ள நிலையில், திருமணம் முடிந்த சில நாட்களுக்கு உள்ளாகவே அபா விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்த செய்தி அவர்களின் குடும்பத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளக்கியுள்ளது. மேலும், குறித்து அவரது குடும்பத்தினர் தெரிவிக்கையில், ”இவர்கள் இருவருக்குள் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படவில்லை.

ஆனால், ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இருவருக்கும் வயது வித்தியாசம் இருந்த சமயத்திலும், இரு குடும்பத்தாரிடையே எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

திருமணத்திற்கு முன்னதாக மணமகன் வீட்டார் சார்பாக ரூ.50 ஆயிரம் ரொக்கம் (இந்தோனேஷியா மதிப்பில் 259 ரூபியா) வழங்கப்பட்டுள்ளது.

இதனல், இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதும் வரதட்சணை பொருட்கள் மீண்டும் கொடுக்கப்பட்டது. இருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று எண்ணினோம்” என்று தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.