தமிழ்நாடு

தந்தை காதலுக்கு எதிர்ப்பு – 17 வயது சிறுமி தற்கொலை!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நாரயணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். கூலித் தொழிலாளியான இவருக்கு சுதா என்ற மனைவியும், 17 வயதில் மைதிலி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். நடராஜ் அருகில் சொந்த வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் மைதிலி பழகி வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் நடரஜுக்கு தெரிந்து மைதிலியை கண்டித்துள்ளார். இதனால் மைதிலி மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

புதன்கிழமை காலை வீடு கட்டும் பணிக்காக லாரி மூலம் செங்கல் வந்துள்ளது. அதை இறக்கி வைக்க நடராஜ், மனைவியுடன் கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளார். திரும்பி வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் மைதிலி தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார். பதறிய பெற்றோர் உடலை இறக்கி பார்த்தபோது, ஏற்கெனவே உயிர் பிரிந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்துக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் காதலை கண்டித்து தந்தை திட்டியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.