இந்தியா

பெங்களூருவில் காங்கிரஸ் “எம்.எல்.ஏ” வீடு சூறை…

கர்நாடகாவின் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்டா சீனிவாசமூர்த்தியின் உறவினர் ஒருவர் முகநூலில் இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளார். இது குறித்து டீ.ஜே. ஹள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், டீ.ஜே. ஹள்ளியில் உள்ள எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தியின் வீட்டின் முன்பு நேற்றிரவு கூடிய ஏராளமானோர், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய நிலையில், வீட்டின் மீது கற்களை எறிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொடர்ந்து பெட்ரோல் குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டதுடன், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. சில மணி நேரம் கழித்து கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அமைதி காக்குமாறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஸ்ரீனிவாச மூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.