தகவல்கள்

புதிய கல்விக்கொள்கை பற்றி தெரிவிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு…

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதை அடுத்து, பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உயர்கல்வி சார்ந்த புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க, வரும் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநில பல்கலைக்கழகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தங்கள் நிறுவனங்கள் சார்ந்த இணையதள பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டு பொதுமக்களின் கருத்துக்களை பெறலாம் எனவும், பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.