மீண்டும் இந்த சேவையை துவங்கியது யூ-டியூப்..மகிழ்ச்சியில் இருக்கும் பார்வையாளர்கள்..
மொபைல் தரவுகளில் 1080p மற்றும் 4K ரெசல்யூஷன் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யும் அம்சத்தை YouTube தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது இப்போது மீண்டும் அந்த சேவையை இயக்க துவங்கியுள்ளது.
ஊரடங்கு மார்ச் 2020 முதல் நடைமுறைக்கு வந்தபோது, அதிக மக்கள் அதிக நேரம் YouTube பயன்படுத்தியதால், அலைவரிசை விகாரத்தைக் (bandwidth strain) குறைப்பதற்கும் நெட்வொர்க்குகள் ஓவர்லோடு ஆவதைத் தடுப்பதற்கும் இந்தியாவில் ஸ்ட்ரீமிங் தரத்தை யூ-டியூப் 480p வரை மட்டுமே வழங்கியது.
வைஃபை மற்றும் மொபைல் தரவு நெட்வொர்க்குகள் இரண்டிற்கும் கேப்பிங் செய்யப்பட்டது. ஆனால் ஜூலை மாதத்தில் யூ-டியூப் கட்டுப்பாடுகளை தளர்த்தியது, பயனர்கள் அதிகபட்ச தெளிவுத்திறனில் ஸ்ட்ரீமிங் செய்ய அனுமதித்தது, ஆனால் வைஃபை உடன் மட்டுமே அந்த சேவை கிடைத்தது.
இப்போது, கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குப் பிறகு, மொபைல் தரவுடன் வீடியோக்களைப் பார்க்கும் பயனர்களுக்கு, வீடியோக்களில் கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த தெளிவுத்திறனில் ஸ்ட்ரீம் செய்ய YouTube அனுமதிக்கிறது.
1080p ஸ்ட்ரீமிங் விருப்பம் கிடைக்கிறதா என்பதை சரிபார்த்தபோது, ஜியோ மற்றும் ஏர்டெல் நெட்வொர்க்குகளில் மிக உயர்ந்த தெளிவுத்திறனில் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய முடிந்தது.
மற்ற நாடுகளிலும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது, ஆனால் இந்தியாவுடன் ஒப்பிடும்போது மற்ற நாடுகளில் விதிக்கப்பட்ட தடைகள் மிக விரைவாகவே தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.