இந்தோனேசியாவிலுள்ள ஜாவா (சாவகம்) தீவிலுள்ள மிக உயர்ந்த மலையின் பெயர் செமேரு ( semeru ).
மேலும் தமிழர்களின் தலைநகராக, கடல்கொண்ட தொல் தமிழகத்தின் எச்சமாக விளங்கும் ஒரு பகுதியின் பெயர் மதுரை. சங்ககாலத்தில் மதுரையே முக்கிய நகரமாக காணப்பட்டது.
மதுரா( Madura ) என்று பெயர்ப்பெற்ற அந்த இடம் ஆங்கிலேயர்களால் மதுரையானது. நம்பாதவர்களுக்கு சான்றாக இன்னும் கூட, மதுரையில் ஒரு கல்லூரியின் பெயர் Madura College தான்.
இந்தோனேசியாவில் யாவகத்தீவில் , மதுரா என்ற பெரில் தீவு மற்றும் நீரிணைப்பு உள்ளது. இந்த இந்தோனேசிய யாவகத்தீவில் உள்ள மதுராவின் மக்கள் இன்றும் பேசும் மொழி மதுரேசி என்றே அழைக்கப்படுகிறது.
இந்தோனேசியாவின் தென் கிழக்கு முனையில் இருந்து 21 ம் நூற்றாண்டின் முதல் புதிய நாடான கிழக்கு திமோர் (இந்தோனேசியாவில் மேற்கு திமோர்). இதில் திமோர் என்பதன் பொருளே தெ-மேரு, தெற்கு-மேரு என்பதே.
- மேரு என்ற சொல் நம் தமிழ் செய்யுள் பலவற்றில் ஆழமான தொடர்பு உடைய சொல் ஆகும்.
- சிலப்பதிகாரப்பாடல் ,மணிமேகலைப்பாடல்களில் மேரு என்ற சொல் பல இடங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சிலப்பதிகாரப்பாடல் :
1) இடைநின் றோங்கிய நெடுநிலை பௌவமும் மேருவில்
2) பஃறுளி ஆற்றுடன் பன்மலையடுக்கத்து குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
மணிமேகலைப்பாடல் :
1) சூழ்கடல் வளை இய வாழ்யங் குன்றத்து நடுவு நின்ற மேருக் குன்றமும்
2) மேருக் குன்றத்து தூரு நீர்ச் சரவண