செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்போர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுவாக மற்ற பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதே சிறந்தது என பலராலும் சொல்லப்படும் நிலையில், செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதைக் குறித்த தகவல்களை அறிவோம்
‘செம்பு பாத்திரத்தை விளக்கி செடிக்கு அடியிலே ஊற்று’ என ஒரு பழமொழி உண்டு..செம்பு பாத்திரம் கழுவிய நீரை செடிக்கு ஊற்றினால் , அந்த நீரில் உள்ள செம்பு செடி மூலமாக சென்று நாம் உண்ணும் காய்கறிகலை மிகுந்த சத்து நிறைந்தாக மாற்றும்..இதுவே அந்த பழமொழியின் அர்த்தம்.நம் முன்னோர்கள் பல ஆண்டுகளுக்கு முன் கூறியதை இந்த கால விஞ்ஞானி களும் உண்மையே என்று கூறுகின்றனர்.
காப்பரின் நன்மைகள் :
- எலும்பை உறுதி செய்யும் தன்மைக் கொண்டவை.
- பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் இரத்தசோகை பிரச்னையின் வரவை கட்டுப்படுத்தும்.
- குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம், உடல் வலிமை கிடைக்கும்.
- நரம்பு செல்கள் இடையே நல்ல தொடர்பை உருவாக்கும்.
- புதிய இரத்த நாளங்களின் வளர்ச்சிக்கு உதவும்.
- ஆரோக்கியமான தோலுக்கு காப்பர் முக்கிய பங்கு அளிக்கிறது
- காயங்களை ஆற்று வதிலும் காப்பரின் பங்கு உள்ளது.
- ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்தியை பெற்ற உதவும்.
- இரத்த அணுக்கள் முறையான செயல்பாட உதவும்.
நமக்கு நாளொன்றுக்கு எவ்வளவு காப்பர் தேவை?
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, பற்றாக்குறையின் அறிகுறிகளைத் தடுக்க, ஒரு நாளைக்கு 1–3 மில்லிகிராம் காப்பர் தேவைப்படுகிறது.
காப்பர் குறைபாட்டால் வரும் உடல் பிரச்சனை
- இரத்த சோகை,
- இதயம் மற்றும் சுழற்சி பிரச்சினைகள்,
- எலும்பு பிரச்சனைகள்,
- நரம்பு மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகள்,
- நுரையீரல்,
- தைராய்டு,
- கணையம் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் உள்ள சிக்கல்கள் போன்ற சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே ஆரோக்கியமான வாழ்விற்கு செம்பு மிகவும் இன்றியமையாத பொருள் என்றே கூறலாம்.
காப்பரில் உள்ள பிரச்சனை:
இவ்வாறு காப்பர் நம் உடலுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு உலோகம் என்றாலும் காப்பர் பிளாஸ்க் மற்றும் பாத்திரங்கள் உபயோகிப்பதில் சிறு பிரச்சனை உள்ளது.
காப்பர் மீது காற்று மற்றும் நீரின் செயல்பாட்டால் , காப்பர் பாத்திரத்தில் ஒரு பச்சை நிற படிவம் உருவாகுவதை நாம் பார்த்திருப்போம் அதன் பெயர் தான் காப்பர் கார்பனேட் ஹைட்ராக்சைடு(Copper Carbonate Hydroxide). இது விஷத்தன்மை உடையது மேலும் நம் உடலிற்கு பல தீமைகளை செய்யக்கூடியது.
எனவே காப்பர் பத்திரங்களை நன்கு சுத்தம் செய்தே பயன்ப்படுத்த வேண்டும்.
காப்பர் பாத்திரத்தை சுத்தம் செய்வது எப்படி?
- காப்பர் பாத்திரத்தை, பாத்திரம் துலக்கும் சோப்பு கொண்டு சுத்தம் செய்யக்கூடாது.
- வெறும் அடுப்புச் சாம்பல் மற்றும் புளியைக் கொண்டு, தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்வதே சிறந்தது.
- சாம்பல் கிடைக்காதவர்கள், புளியை மட்டுமே பயன்படுத்தலாம்.
- லெமன் மற்றும் உப்பு கொண்டும் காப்பர் பாத்திரத்தை சுத்தம் செய்யலாம்.
காப்பர் பிளாஸ்க்குகள் சிறிய வாய் கொண்டு இருப்பதால் அதில் பச்சை படிவம் இருக்குமா என்பதை நாம் கண்டு அறிய முடியாது எனவே பிளாஸ்க் போன்ற காப்பர் பாத்திரங்களை மற்றும் தவிர்த்து விட்டு மற்ற காப்பர் பொருட்களை பயன்படுத்தி மகிழ்வோம்.