சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளி வந்த பேரறிவாளனின் பரோலை மேலும் 2 வார காலத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சிறை வாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு பரோல் வழங்க அவரது தாயார் அற்புதம்மாள் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதையடுத்து உடல்நலக்குறைவு காரணமாக பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.
வரும் 9ஆம் தேதியோடு பரோல் நிறைவடையவுள்ளதால் மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு கேட்டு அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர வேண்டியுள்ளதால் கூடுதல் அவகாசம் வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மருத்துவ சிகிச்சை காரணமாக பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோலை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.