விளையாட்டு

நான் அப்பவே சொன்னேன்… இந்திய ரசிகர்களை சீண்டி இங்கிலாந்து வீரர் போட்ட அதிரடி டிவிட்!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் முன்னதாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி விட்டு வெற்றிக் கோப்பையுடன் தாயகம் திரும்பினர். இந்த வெற்றியை இந்தியா நாடாளுமன்றம் உட்பட அனைவரும் வரவேற்று பாராட்டுகளைத் தெரிவித்தனர். ஆனால் இந்த வெற்றிக் குறித்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான பீட்டர்சன் போதும் நிறைய கொண்டாட வேண்டாம்… என்று நக்கலாக கூறி இருந்தார்.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன், இதற்குத்தான் நான் அப்பவே சொன்னேன்… என மீண்டும் தன்னுடைய டிவிட்டரில் கருத்து பதிவிட்டு இந்திய ரசிகர்ளை சீண்டி உள்ளார். பீட்டர்சன் தன்னுடைய டிவிட்டர் பதிவில், “ஆஸ்திரேலியாவை அந்த நாட்டில் தோற்கடித்தபோது நிறைய கொண்டாட வேண்டாம் என நான் எச்சரிக்கை விடுத்தது நினைவில் இருக்கிறதா இந்தியா” என்று நக்கலாக பதிவிட்டு உள்ளார்.

இந்தப் பதிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் குல்தீப் யாதவ் மற்றும் சிராஜ் இடம் பெறாதது குறித்தும் சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அக்சர் படேலுக்கு பதிலாக களம் இறக்கப்பட்ட சபாஷ் நதீம் அணியில் இருந்து விலக்கப்படுவார் என்றும் மீண்டும் அக்சர் படேல் அணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.